Seyam - இனிப்பு சீயம்

Ingredients 

பாசிப்பருப்பு.         - 1 கிண்ணம்

சர்க்கரை(சீனி).     - 3/4 கிண்ணம்

தேங்காப்பூ.           - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்               - 1/4 டீஸ்பூன்

பச்சிசி                   - 1/2 கிண்ணம்

உளுத்தம் பருப்பு   - 1/4 கிண்ணம்

வெல்லம்/சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை

பாசிப்பருப்பை ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். 

பச்சரிசியையும் உளுத்தம் பருப்பையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் மை போல கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். 

ஊறிய பாசிப்பருப்பை தண்ணீரை வடித்துவிட்டு ஒரு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்கவும். 

பாசிப் பருப்பை நன்கு மலர (அ) மசிய வேக வைக்க வேண்டும். இதற்கு அரை மணி நேரமாகும்(கீழே உள்ள பாத்திரத்தில் அரை மணிக்கு  தேவைப்படும் நாலு டம்ளர் தண்ணீரை வைத்து  கவனமுடன் பார்ததுக் கொள்ளவும். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இட்லி பாத்திரத்தை திறந்து பார்த்து பாசிப்பருப்பு மீது  தண்ணீர் தெளித்து தெளித்து வேக வைக்கவும். 

பருப்பு வெந்த பிறகு அடுப்பில் ஒரு இருப்பு சட்டியை வைத்து ஒரு டேபிள் ஸபூன் நெய் சேர்த்து நெய்உருகியதும் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பாசிப் பருப்பு  மற்றும் சர்க்கரை இவை அனைத்தையும்  ஒன்றாக சேர்த்து கிளறவுமம் கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.

பாசிப்பருப்பு பூரணம் நன்றாக ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பச்சரிசி உளுந்து சேர்த்து ஆட்டிய மாவில் கொஞ்சம்(சிறிதளவு) மாவை மட்டும்எடுத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பத்த்திற்கு கரைத்துக் கொள்ளவும். இப்பொழுது அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் பாசிப் பருப்பு பூரண உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் மெதுவாக போட்டு பொரித்து எடுக்கவும்.இப்பொழுது சீயம் தயார் சாப்பிடுவதற்கு 😊  

இந்த பாசிப்பருப்பு பூரணத்தையும் பச்சரிசி உளுந்து சேர்த்து அரைத்த மாவையும் ப்ரிட்ஜில் ஒரு வாரம்  வரை வைத்துக் செய்து கொள்ளலாம்.. 

பச்சரிசி உளுந்து சேர்த்து அரைத்த மாவு அதிகமாக மிஞ்சி விட்டால் ஒரு வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் அரிந்து கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் பச்சைமிளகாயை வதக்கிக் கொள்ளவும். மாவை பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு வதக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் கொத்தமல்லி கறிவேப்பிலையும் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.  இந்த  மாசாலா சீயம் மாவை கையால் சிறு சிறு உருண்கிடைகளாக கிள்ளி எண்ணெயில்  போட்டு  பொரித்து எடுத்தால்  சுவையான மாசாலா சீயம் ரெடி. மிக கவனாமாக செய்யவும். ஸ்பூனால் மாவை  அள்ளி ஊற்றி தான் செய்வேன். இட்லி மாவுடன் சேர்த்து தோசையாகவும் வார்த்து விடலாம். 

Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை காய்கறி அடை

White Kurma/திரக்கல்

Tandoori Mushroom/Mushroom 65